Posts

Showing posts from July, 2021

ஆணுக்கும் மாதவிடாய்

Image
என் மாதவிடாய் வலியை காணப்பொறுக்காமல் இரக்க முகத்தோடு என்னையே பார்த்து நின்றிருந்தான். எழுந்து நடந்து, அவரை அணைத்துக்கொண்டு 'எனக்கு ஒன்றுமில்லை' என சொல்லத்தான் ஆசை. ஆனால் என்னால் நகர முடியவில்லையே. அடிவயிற்றில் நங்கூரமிட்டு இழுப்பது யாரோ.. அசைய மறுத்து கிடக்கிறேன் நானே.. இன்றோடு திருமணமாகி முப்பத்தி இரண்டாம் நாள், இதுவரையில் வீடு முழுக்க சுற்றி சுற்றி ஓடியவளையும் வம்பிழுத்து வாயாடி கொண்டிருந்தவளையும் என் கணவன் தேடிக்கொண்டிருந்தான். இதை வாயால் சொல்லும் முன்பே கண்ணால் பேசிவிட்டான்.  இதுவரையில் இல்லாத நானாய்.. அவனுக்கு இப்போது 'புதிதான நான்'. இந்த ரத்தம் அவர் நுகரும்படியாகவும், வலி அவர் உணரும்படியாகவும் நெருக்கத்திலே இருந்தது. கண்ணீரைத் துடைத்துக்கொண்டு கால்களை இறுக்கிக்கொண்டு நான் படுத்திருக்கையில், கையோடு எனை தூக்கி மார்போடு சாய்த்து மடியோடு வைத்திருந்தான். என் யோனி அவன் மடியிலே இருந்தது. அந்த நாட்கள் முழுவதுமாய் என் ஆணுக்கும் மாதவிடாய் .  என்னோடு அசையவே மறுத்திருந்தான்.

காப்பி கவனச்சிதறல் தடுப்பான்

Image
பலமுறை நாவு பதறியது இந்த சுடுகாப்பியில், இருந்தும் விருப்பத்திலிருந்து விலக்கி வைத்ததில்லை ஒருமுறையில் கூட.. என் கவனச்சிதறல் தடுப்பான் இவன்..

நிறைவு நாளின் நினைவாக..

Image
ஆபீசுக்கு வந்து சேர்ந்த கதிர், யாரிடமும் புன்னகையை கொடுக்கவும் இல்லை; வணக்கத்தை பெற்றுக் கொள்ளவும் இல்லை. அவசர அவசரமாக இருக்கைக்கு வந்தான். என்ன சார்! இன்னிக்கு ரொம்ப லேட்டா.. அட்டெண்டன்ஸ் ல கூட கையெழுத்துப் போடல வந்து நின்றான், பியூன். ஆமாய்யா.. லேட், டென்சன்.. கையெழுத்திட்டுக்கொண்டே சொன்னான். அவன் போக மறுபுறம் அலைபேசி 'உயிரே உயிரே உயிர் நீதான் என்றால்' 'உடனே வருவாள்'.. என ஒலியெழுப்ப ராட்சசி வந்துட்டா என பொத்தானை அழுத்தி கனத்த குரலில், ` சொல்லு´ என்றான். அந்தப் பக்கத்திலிருந்து.. `சாரி டா´!   இருக்கட்டும், சாயந்தரம் வந்து உன்ன பேசிக்கிறேன். நான் வரும்போது நீ மூணு வேளையும் சாப்பிட்டு ரெண்டு மணி நேரமாச்சும் தூங்கி எழுந்திருக்கணும்.  சண்டையை நெனச்சு கண்ண கசக்கிட்டு மூலையில இருந்தா அப்படியே நான் வெளியில போயிடுவேன்டி, போனை வைக்கிறேன். என்னய்யா! காலையிலேயே எள்ளா வெடிக்கிற, இது சக தொழிலாளி நல்ல நண்பனின் குரல். வேற என்ன வீட்டம்மா தான்டா.. இன்னையோட நாங்க காதலிச்சு நாலு வருஷம் கல்யாணம் முடிஞ்சு ஒரு வருஷம்.. ஆக ஐந்து வருஷ நிறைவு நாள். இது சந்தோஷம் தானடா! குழப்பத்தோடு நண்பன். ஆமா!...

மாமா.. வரும் போது

Image
மாமா.. வரும் போது -என்றே பல உரையாடல்களை தொடங்குவாள். எவ்வளவு தூரம் எங்கு சென்று திரும்பினாலும் வரும் வழியில் அவள் மட்டுமே அவன் நினைவினில் நிலைத்திருக்க..

தாமரை பூவு வள்ளிக்கன்னு

Image
அரசுப்பள்ளி, மூன்றாம் வகுப்பு.. அங்கே பெயரின் அகர வரிசை எடுபடாது, உயர வரிசையில் தான் உட்கார வைப்பார்கள். உயர்ந்த உள்ளமும் உயரமும் கொண்ட கடைசி வரிசையிலிருந்து...ஒரே பேச்சு தான்.. என்னடி வந்ததுலயிருந்து வள்ளிக்கன்னு பேசவே இல்ல, பூவாயியும் தாமரையும் முணு முணுத்தார்கள்.. டீச்சர் போகட்டும்டி அப்புறம் கேப்போம்.. இல்ல வேணாம் இப்போவே கேக்கலாம். கூசிய குரலில் வள்ளி! அடியே வள்ளி.. என்ன! என்றாள். ஏன் உம்னு இருக்க வீட்ல சண்டயா.. இல்ல.. என்றாள். வாட் இஸ் ஹாப்பினிங் தேர்? கடைசி பெஞ்சுக்கு என்ன வேணும், -ஆசிரியையின் குரல். அச்சோ.. டீச்சர் பாக்குறாங்க.. ஷ்.. ஷ் என்றாள் பூவாயி. மூசு மூசென அழுதாள் வள்ளி. பாடவேளை முடியும் நேரம் டீச்சர் போயும் போகாமலும் நடக்க, அவள் பொறுக்க முடியாமல் ஓவென அழுதாள்.. பூவும் தாமரையும் பதறி போயி சொல்லு சொல்லு என்றார்கள். நாயி.. நாயி.. திரும்பவும் மூசு மூசு அழுகை.. நாயி நாயி.... திரும்பவும் அழுகை. எங்கள ஏன் திட்டுற இப்போ, தாமரையும் உடன் அழுதாள். உங்கள திட்டல.. என் நாயி இருக்குல்ல அது காலைல செத்துப்போச்சு.. அழுவாத சரி போவட்டும் நாயி தான, சொன்னாள் பூவு. அது எனக்கு பாப்பா போல... ...

பைக் பயணம்

Image
இருளினில் வருகையில் எரிந்திடும் மின் விளக்கே எவன் கை விரித்தாலும் எனை பற்றும் இரு கரமே இசையோடு கூட்டி போகையில் எனக்கிரண்டு றெக்கை, மறவாது செல் சாலையோர இடக்கை.

யார் அந்த உருவம்..?

Image
வழக்கம் போல அல்லாது பரீட்சைக்காக விடிகாலை மூன்று மணிக்கே எழுந்திருந்தாள். கண்ணை கசக்கி கொண்டே அரை குறையாய் முகம் கழுவிவிட்டு, புத்தகத்தோடு சன்னலின் முன் அமர்ந்தாள். காற்றோட்டத்திற்கு சன்னலை திறந்துவிட்டு வரி வரியாக வாய் விட்டு படிக்க தொடங்கினாள், அரை பத்தி கடந்திருக்க மாட்டாள், விழி பிதுங்கும் படியாய் வெளியில் பார்த்தாள் .. சன்னலின் வெளிப்புறம் வீட்டின் முற்றம் அருகில் முருங்கை மரம்.. யார் அதன் அருகில் (!?) நாற்காழியிட்டு செவப்பு சேலையில், தலைவெறி கோலமாய்.. தன் புடவை முந்தானையால் காற்று விசிறிக்கொண்டு என்னை ஏன் பார்க்கிறாள்.. அய்யோ! பேயா பிசாசா கடவுளே.. சன்னல் கதவை அடைக்கலாமா, திடுக்கென அதுவே திறந்துவிட்டால்.. அம்மாவை எழுப்பலாமா, அம்மா பார்க்கையில் இல்லாதுப்போனால்.. தன்னுள்ளே பேசி பேசி குழம்பி போனவள், நாளையும் இந்நேரம் வந்து பார்க்கலாம், யாரேனும் இருந்தால் ஊரையே திரட்டாலமென தீர்க்கம் கொண்டு.. மெல்லமாய் மின் விளக்கை அணைத்து, எந்த பக்கமும் திரும்பாமல் அம்மாவின் கை பக்கமாய் படுத்துக்கொண்டாள். அடுத்த நாளையிலிருந்து மூன்று நாட்கள் விடா பிடி ஜுரம். நான்காம் நாளிலிருந்து அவள் ஆறு மணிக்க...