நீ வந்தாய்..

கண்ணீராய் நான் இருந்தேன்
உன் காதல் கொண்டு
நீ வந்தாய்..

-பின் தன் துயரம் தான் மறந்து
என் தாயாக நீ நின்றாய்.

பெண் பலர் சூழ்ந்து வந்து
தன் அன்பை தான் உரைக்க
என்னவனாய் நிலைகொண்டு
தன் பெயரை வென்று வந்தாய்

-பெண்ணவளின் புகழ் கருதி
தன் நினைவை காத்து வந்தாய்

அன்று
தோள் சாய தோள் தந்து
துணையானாய் என் பக்கத்தில்,
இன்று
உயிருக்கு உயிர் தந்து
உயர்ந்தோனாய் என் உள்ளத்தில்.

Comments

Popular posts from this blog

முகம் அநேகம்

நம்மை பிரிக்குதே!

தகப்பன் பெத்த சாமி